0.5% ALCOHOL -கலாநிதி கர்ளாவியின் கண்மூடித்தனமான ப&a

RajNOX

Member
Nov 20, 2008
1,274
2
0
0.5% ALCOHOL -கலாநிதி கர்ளாவியின் கண்மூடித்தனமான ப&a

0.5% ALCOHOL -கலாநிதி கர்ளாவியின் கண்மூடித்தனமான பத்வா!!

இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஏப்ரல் 14, 2008 by darulathar

அண்மையில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தினரின் மூத்த அறிஞர்களில்!ஒருவரான கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி அவர்கள் "ஸஹீபதுல் அரப்"பத்திரிகையில் வழங்கியுள்ள ஒரு விநோதமான பத்வா உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் மத்தியில் குறிப்பாக மத்திய கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் மத்தியிலும் பேர*திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் இஸ்லாமிய அறிஞர்கள் மட்டத்திலும் கடும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறைந்தளவிலான அல்கஹோல்(போதை மூலப்பொருள்)கொண்டுள்ள உற்சாக பானமான "ரெட்புல்"பற்றிய வாசகரின் கேள்விக்கு பதிலளிக்கையில் பின்வருமாறு தெரிவித்தார்.


"குறைந்தளவிலான போதைப்பொருள் (அல்கஹோல்)இஸ்லாத்தில் ஹராமில்லை.குறிப்பாக இயற்கை முறையில் புளிக்கவைக்கப்பட்ட (போதையாக்கப்பட்ட)சிறியளவிலான 0.5% போதைப்பொருள் இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டதே!"


மேற்படி கர்ளாவி அவர்களின் பத்வாவை விமர்சித்த "ஷர்க்" எனும் கட்டார் நாட்டின் பத்திரிகை ஆசிரியர் மேற்படி பத்வா முஸ்லிம்களுக்கு மத்தியில் கடுமையான விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும்,இந்த* பத்வா கர்ளாவி அவர்களுக்கு தேவையில்லாத ஒரு பத்வா எனவும் தன*து வெள்ளிக்கிழமை ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.*


மேற்படி பத்வாவின் மூலத்தை அறிய இங்கே சொடுக்கவும்.
ஆங்கிலத்தில்
BBC News

http://www.gulfnews.com/News/Gulf/qatar/10205203.html


அர*பியில்
http://news.bbc.co.uk/hi/arabic/middle_east_news/newsid_7343000/7343145.stm


இதுபோன்ற இஸ்லாத்தின் பொன்னான போதனைகளுக்கு முற்றிலும் மாற்றமான,முஸ்லிம்களின் ஒழுக்க விழுமியங்களை சீர்குலைக்கின்ற பத்வாவை இந்த யூஸுப் அல்கர்ளாவி வெளியிடுவது இது தான் முதற்தடவையல்ல. இதற்கு மாறாக ஏற்கனவே இவர் சிறு அளவிலான வட்டி கூடுமென பத்வா வழங்கி தாயோடு விபச்சாரம் செய்வதற்குச் சமமென நபிகளாரால் எச்சரிக்கப்பட்ட வட்டியை ஹலாலாக்கியதும்,இன்று வழிகெட்ட* ஷீஆக்களின் விபச்சார முறையான "முத்ஆ" (தவணை முறை திருமணம்) வை ஹலாலாக்கி முஸ்லிம்களின் ஒழுக்கச் சீர்கேட்டுக்கு வித்திட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது..


மேற்படி ஆதாரமற்ற,அறிவுபூர்வமற்ற,உளற*ல்களை மறுதளிக்குமுகமாக நபி(ஸல்)அவர்களின்

"ஒரு பொருளை அதிகம் பாவிப்பதால் போதை ஏற்படும் என்றால் அப்பொருளை குறைவாகப் பாவிப்பதும் ஹராமே"

எனும் ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி)அவர்களால் அறிவிக்கப்படும் அபூதாவுதில் இடம்பெற்றிருக்கும் பொன்மொழி அமைந்துள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
سنن أبي داود - (ج 10 / ص 106)


3196 - حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا إِسْمَعِيلُ يَعْنِي ابْنَ جَعْفَرٍ عَنْ دَاوُدَ بْنِ بَكْرِ بْنِ أَبِي الْفُرَاتِ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَسْكَرَ كَثِيرُهُ فَقَلِيلُهُ حَرَامٌ
 

RajNOX

Member
Nov 20, 2008
1,274
2
0
sorry sorry got the article in tamil.. nothing to do with other other religion... inside bussiness of islam... nothing to worry
 

gazaly

Member
Nov 21, 2006
11,736
207
0
S.A
Machan Raj Umba Yusufu Karlage Fathwa Gannawada nahaney Man Chaa max ban... :( man nam sure ekatama western wala Rookadayak thamai neyda machan... mata nam man wa peynna baha..
 

sirajstc

Well-known member
  • Apr 2, 2008
    58,814
    1,618
    113
    ~*~CeYLoN..~*~
    ratedrkoman said:
    salaamz bro

    i think what u've posted is a good thing
    but unfortunately most of us cant read or write in tamil
    so if u could kindly translate this into sinahla/english that would be greatly apriciated

    yes brother:)