உயிரின் உயிரே
உயிரின் உயிரே
நதியின் மடியில்..
காத்துக் கிடக்கின்றேன்.
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் அடித்தும்
முழுதும் வேர்க்கின்றேன்.
கனலும் நெருப்பாய் கொழுந்து விட்டெரிய
அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்.
காலைப் பனியாக என்னை வாரிக்கொள்வாய்
***நேரம் கூட எதிரி ஆகிவிட
யுகங்கள் ஆக பொழுது மாறிவிட***
அணைத்துக் கொண்டாயே...
பின்பு ஏனோ சென்றாய்....
**ஸ்வாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே***
இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே...
***நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணைக் கிள்ள
நிழல் எது...
நிஜம் எது
குழம்பினேன் வா பெண்ணே...***
காற்றின் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னை அன்றி யாரைத் தீண்டும்
விலகிப்போகாதே
தொலைந்து போவேனே.. நான்...
()
இரவின் போர்வை என்னைச் சூழ்ந்து
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை.. தேடினேன்..
உன்னிடம் வா பெண்ணே..
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒரு முறை மடியிலே உறங்குவேன்
வா பெண்ணே..
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும
அருகில் வாராயோ..
விரல்கள் தாராயோ...