පසුගිය දින කිහිපය තුළ අන්තර්ජාලය ඔස්සේ භාණ්ඩ අලෙවි කරන වෙළෙඳුන් පිළිබඳව අප වෙත ලැබුණු පැමිණිලි වලට අනූව, ඉතා ඉහළ මිල ගණන්වලට අන්තර්ජාලය ඔස්සේ මෙම භාණ්ඩ අලෙවි කරන ආයතන රාශියක් නිරීක්ෂණය විය. ඒ අනුව වහාම ක්රියාත්මක වූ පාරිභෝගික කටයුතු පිළිබඳ අධිකාරියේ නිලධාරීන් විසින් රහස් පොලිසියේ ද සහාය ඇතිව අද දින (25) විශේෂ වැටලීමක් සිදු කරන ලදී. ඒ අනූව, අන්තර්ජාලය ඔස්සේ විකිණීම සඳහා අධික මිලක් සඳහන් කර ප්රදර්ශනය කර ඇති භාණ්ඩ සාමාන්ය විකුණුම් මිල ගණන් යටතේ විකිණිය යුතු බවටත්, ඉතා ඉහළ මිල ගණන් වලට භාණ්ඩ මිලදී ගත් පාරිභෝගිකයන්ට තමන්ගේ අනන්යතාවය ඔප්පු කිරීමෙන් පසු ඔවුන් පාරිභෝගිකයින්ගෙන් අය කර ගත් වැඩි මුදල පාරිභෝගිකයින් වෙත ආපසු ලබා දෙන ලෙසටත් පාරිභෝගික කටයුතු පිළිබඳ අධිකාරිය ඔවුන්ට දන්වා ඇත. එමෙන්ම මොවුන්ට එරෙහිව අධිකරණය හමුවේ නඩු පැවරීමට නියමිතයි.
රටේ ඇති වී ඇති හදිසි තත්වය වාසියක් කර ගනිමින් වංචනික ලෙස ක්රියා කරන මෙවැනි වෙළෙඳුන් සම්බන්ධයෙන් තොරතුරු අප වෙත ලබා දෙන්න. අපගේ නිලධාරීන් අවශ්ය සෑම විටම ක්රියාත්මක වනු ඇත.
මේ සම්බන්ධයෙන් අපගේ ෆේස්බුක් පිටුව හරහා තොරතුරු ලබා දෙමින් අපව දැනුවත් කළ සියලු දෙනාට ස්තුතියි.
கடந்த சில நாட்களாக இணையத்தினூடாக (Online) பொருட்களை விற்கும் விற்பனையாளர்கள் தொடர்பாக எங்களுக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைவாக, மிக அதிக விலைக்கு இணையத்தினூடாக இப்பொருட்களை விற்கும் பல நிறுவனங்கள் அவதானிக்கப்பட்டன.
அதற்கேற்ப உடனடியாக செயற்பட்ட பாவனையாளர் அலுவல்கள்அதிகார சபையின் உத்தியோகத்தர்களினால் இரகசிய போலீசாரினது உதவியுடன் இன்றைய தினம் (25) விஷேட சுற்றி வளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதற்கு ஏற்ப, இணையத்தினூடாக விற்பனை செய்வதற்காக அதிக விலையினை குறிப்பிட்டு காட்சிப்படுத்தபட்டுள்ள பொருட்கள் சாதாரண விற்பனை விலைக்கு விற்கப்பட வேண்டும் என்றும், மிக அதிக விலைக்கு பொருட்களை கொள்வனவு செய்த பாவனையாளர்களுக்கு அவர்களது அடையாளங்களை உறுதிப்படுத்தியதன் பின்னர் அவர்களிடம் மேலதிகமாக அறவிடப்படட்ட மேலதிக பணத்தை திருப்பி வழங்கி விடுமாறும் பாவனையாளர் அலுவல்கள்அதிகார சபை விற்பனையாளர்களுக்கு அறிவித்துள்ளது. அத்துடன், இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய்யபடவுள்ளது.
நாட்டில் ஏற்ட்பட்டுள்ள அவசரகால நிலைமையை சாதகமாக பயன்படுத்தி நியாமற்ற முறையில் செயற்படும் இவ்வாறான விற்பனையாளர்கள் தொடர்பான தகவல்களை எமக்கு வழங்கவும். எமது அதிகாரிகள் தேவையான எல்லா சந்தர்பங்களிலும் செயற்படுவார்கள்.
இது தொடர்பாக எமது முகப்புத்தகத்தினூடாக (Facebook) தகவல்களை வழங்கி எங்களுக்கு அறிவித்த அனைவருக்கும் நன்றி.